Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா, மா.சுப்பிரமணியன் கடும் வாதம்: அனல் பறந்த பேரவை!

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (15:08 IST)
தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் இன்று திமுக உறுப்பினர் மா.சுப்பிரமணியனுக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையே மோனோ ரயில், மெட்ரோ ரயில் தொடர்பாக கடும் வாதம் நடைபெற்றது.


 
 
மோனோ ரயில் தொடங்குவதாக சொல்லிவிட்டு மெட்ரோ ரயில் திட்டம் மட்டுமே செயல்படுத்துவது ஏன் என்று திமுக உறுப்பினர் மா.சுப்பிரமணியன் இன்று சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.
 
திமுக உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் ஜெயலலிதா, மெட்ரோ ரயில் திட்டப்பணி தொடங்கி நடந்து வருவதால் பாதியில் நிறுத்த முடியாது என்றார். மேலும் ஒரு திட்டத்தை தொடங்குவது, முடிப்பதில் யார் வல்லவர்கள் என்பதை வீராணம் திட்டம் ஒன்று போதும் எனவும் கூறினார்.
 
முதல்வர் ஜெயலலிதாவின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த மா.சுப்பிரமணியன், பேச அனுமதி கோரினார். ஆனால் சபாநாயகர் தனபால் அதற்கு அனுமதி மறுத்துவிட்டார். இதனால் திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments