ஜெயலலிதா, மா.சுப்பிரமணியன் கடும் வாதம்: அனல் பறந்த பேரவை!

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (15:08 IST)
தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் இன்று திமுக உறுப்பினர் மா.சுப்பிரமணியனுக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையே மோனோ ரயில், மெட்ரோ ரயில் தொடர்பாக கடும் வாதம் நடைபெற்றது.


 
 
மோனோ ரயில் தொடங்குவதாக சொல்லிவிட்டு மெட்ரோ ரயில் திட்டம் மட்டுமே செயல்படுத்துவது ஏன் என்று திமுக உறுப்பினர் மா.சுப்பிரமணியன் இன்று சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.
 
திமுக உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் ஜெயலலிதா, மெட்ரோ ரயில் திட்டப்பணி தொடங்கி நடந்து வருவதால் பாதியில் நிறுத்த முடியாது என்றார். மேலும் ஒரு திட்டத்தை தொடங்குவது, முடிப்பதில் யார் வல்லவர்கள் என்பதை வீராணம் திட்டம் ஒன்று போதும் எனவும் கூறினார்.
 
முதல்வர் ஜெயலலிதாவின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த மா.சுப்பிரமணியன், பேச அனுமதி கோரினார். ஆனால் சபாநாயகர் தனபால் அதற்கு அனுமதி மறுத்துவிட்டார். இதனால் திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓபிஎஸ்க்கு ஒருபோதும் அதிமுகவில் இனி இடமில்லை.. பாஜகவுக்கு 30 தொகுதிகள்: சேலம் மணிகண்டன்

ஆனந்த் அம்பானியின் வனவிலங்கு மையத்தில் மெஸ்ஸி.. யானையுடன் கால்பந்து விளையாடினார்..!

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகாது.. ஒரே ஒரு காரணம் இதுதான்..!

2 இரட்டை இலைக்கு 1 தாமரை. தொகுதி பங்கீட்டில் அண்ணாமலையின் ஆதிக்கம்..!

சீமான் கூட நிரூபிச்சிட்டாரு!.. விஜய் ஒன்னுமில்ல!.. இராம சீனிவாசன் நக்கல்!.

அடுத்த கட்டுரையில்
Show comments