Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவை சந்திக்க விரும்பினால் இது வேண்டும் - கர்நாடக அரசு வலியுறுத்தல்

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2017 (15:49 IST)
சசிகலாவை சந்திக்க விரும்பினால் ஆதார் கார்டு வேண்டும் என கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.


 

 
ஏற்கனவே ரேஷன் கார்டு, ரயில் டிக்கெட், வங்கிகளில் பண வர்த்தனை, பள்ளிகளில் சத்துணவு சாப்பிட என்பது உள்ளிட்ட பல இடங்களில் ஆதார் அட்டை முக்கியம் என்ற அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், சிறையில் உள்ள கைதிகளை சந்திக்க வருபவர்கள் இனி ஆதார் அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என சமீபத்தில் மத்திய அரசு விதியை கொண்டு வந்தது. 
 
எனவே, இதை கர்நாடக அரசு பின்பற்ற முடிவு செய்துள்ளது. எனவே, ஏப்ரல் 1ம் தேதி முதல் சசிகலா, இளவரசி ஆகியோர் அடைக்கப்பட்டுள்ள பரப்பன அக்ரஹார சிறையில், ஆதார் அட்டை இல்லாமல் யாரும் கைதிகளை பார்க்க முடியாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
அப்படி கைதிகளை காண வருபவர்களின் ஆதார் எண் குறித்த விவரங்கள் சிறைப் பதிவேட்டில் குறித்து வைக்கப்படும் எனவும், இது போன்ற நடவடிக்கைகள் சிறைக்கைதிகளின் செயல்பாட்டினை அறிய உதவும் எனவும் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இந்த புதிய நடைமுறையால், இனிமேல் சசிகலாவை சந்திக்க விரும்புவர்கள் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

பக்தர்கள் கவனத்திற்கு.! திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கணுமா..! ஆன்லைனில் நாளை டிக்கெட்..!

வங்கதேசத்தில் ஒரே ஐஎம்இஐ எண் கொண்ட ஒன்றரை லட்சம் மொபைல் ஃபோன்கள் - மோசடியின் பின்னணி என்ன?

மேகதாது அணை விவகாரம்.! மத்திய அமைச்சருக்கு ராமதாஸ் கண்டனம்..!!

தமிழகத்தில் இன்னொரு இடைத்தேர்தலா? லால்குடி எம்.எல்.ஏ ராஜினாமா செய்ய போவதாக தகவல்..!

தோல்வி பயத்தால் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! அதிமுகவை விளாசிய ஆர்.எஸ் பாரதி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments