Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை?

Webdunia
வெள்ளி, 30 டிசம்பர் 2022 (20:52 IST)
சமீப காலமாக ஆன்லைன் சூதாட்ட விளையாட்டினால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டுமென அனைத்துக் கட்சிகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மீண்டும் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணமிழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் அருகே கருமன் பூண்டி பகுதியில் வசித்து வந்தபவர் அருண்குமார்(24). இவர் பிகாம் பட்டதாரி ஆவார்.

இவர்  கடந்த 22 ஆம் தேதி தன் வீட்டில்இருந்து கிளம்பிய நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், இன்று அருண்குமாரின்  உடல் கிணற்றில் மிதந்தது.

பொதுமக்கள் போலீஸில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார்,  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் ஆன்லைனில் பணமிழந்தாரா என  விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகை சித்ராவின் கணவர் விடுதலை.. மேல்முறையீடு செய்த தந்தை காமராஜ்..!

மிரட்டி பணம் பறித்த புகார்: நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

பாப்பம்பாள் பாட்டி காலமானார்: மோடி, உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன் இரங்கல்!

இந்த ராசிக்காரர்களுக்கு பிரிந்த நண்பர்கள், உறவினர்கள் வந்து சேர்வார்கள்!– இன்றைய ராசி பலன்கள்(28.09.2024)!

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments