Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பிய லஞ்ச ஒழிப்புத்துறை!

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (17:09 IST)
முன்னாள் அமைச்சர் எம்ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திய நிலையில் தற்போது அவரை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த ஜூலை 20-ஆம் தேதி சோதனை நடத்தப்பட்டது. அவருக்கு சொந்தமான இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்ற சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் செப்டம்பர் 30ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த சம்மனை அடுத்து முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரிடம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விசாரணை செய்த பின்னர் கைது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது குறித்து தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

அடுத்த கட்டுரையில்
Show comments