Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சியில் தீப்பிடித்து எரிந்த தனியார் பேருந்து! - அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்!

Prasanth Karthick
வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (09:33 IST)

சென்னை நோக்கி வந்துக் கொண்டிருந்த தனியார் பேருந்து திடீரென தீப்பிடித்த சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தலைநகர் சென்னைக்கு தினசரி அரசு, தனியார் பேருந்துகள் பல இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறாக திருச்சியில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு தனியார் சொகுசு பேருந்து ஒன்றில் 27 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

 

தனியார் பேருந்து திருச்சி மன்னார்புரம் மேம்பாலத்தை கடந்து சென்றுக் கொண்டிருந்தபோது பேருந்தின் டயர் வெடித்துள்ளது. தொடர்ந்து பேருந்தில் தீப்பற்றியுள்ளது. உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பயணிகள் வெளியேறி சில நிமிடங்களில் மளமளவென தீப்பற்றிய பேருந்து முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12th முதல் டிகிரி வரை.. ரயில்வேயில் 11,558 பணியிடங்கள்..! - உடனே Apply பண்ணுங்க!

அடுத்த 3 மணி நேரத்திற்குள் 5 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

பிளாஸ்டிக், அலுமினியம் ஃபாயில் காகிதங்களில் உணவு பொட்டலம்.. மலட்டுத்தன்மை ஏறப்டும் என எச்சரிக்கை..!

27 நாடுகளில் பரவும் புதிய வகை கொரோனா.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை

சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் தனியாக கழன்று ஓடிய 3 பெட்டிகள்: பயணிகள் அதிர்ச்சி;

அடுத்த கட்டுரையில்
Show comments