பெரியாரின் பிறந்த நாளான இன்று சென்னையில் மர்ம நபர் ஒருவர் பெரியாரின் சிலை மீது காலணியை வீசப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாபெரும் தலைவர் பெரியாரின் 140 நாளாவது பிறந்தநாளான இன்று அவரது சிலைக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவன் தன் காலில் இருந்த காலணியை எடுத்து பெரியார் சிலை மீது வீசினார்.
இதனால் அங்கிருந்தவர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகினர். அந்த நபரை பிடித்து பொதுமக்கள் சரமாரியாக அடித்தனர். உடனடியாக அங்கு வந்த போலீஸார் அந்த மர்ம நபரை கைது செய்தனர்.
பெரியாரை அவமதித்ததாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸாரின் பேச்சு வார்த்தைக்குப் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அண்ணா சாலை பகுதியே சற்று நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!
மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!
மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!
பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!