Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபலமான கடைகளின் முதலாளிகளுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்-- ராஜேஸ்வரி பிரியா

Webdunia
சனி, 25 நவம்பர் 2023 (18:44 IST)
குடும்பச் சூழ்நிலை காரணமாக பட்டப் படிப்பினை தொடரமுடியாமல் பள்ளி படிப்புடன் வேலைக்கு வந்துவிடுகின்றனர். பிரபலமான கடைகளின் முதலாளிகளுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களை தொலைதூர கல்வி முறையில் பட்டபடிப்பு படிக்க வையுங்கள் என்று ராஜேஸ்வரி பிரியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

சென்னை தியாகராய நகரில் பிரபலமான கடைகளில் திருநெல்வேலி, தென்காசி மற்றும் பல ஊர்களிலிருந்து இளம் வயதுடைய நிறைய பெண்களும் ஆண்களும் வேலை செய்வதனை காணமுடிகிறது.

அதில் பலர் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் ஆவர்.குடும்பச் சூழ்நிலை காரணமாக பட்டப் படிப்பினை தொடரமுடியாமல் பள்ளி படிப்புடன் வேலைக்கு வந்துவிடுகின்றனர். பிரபலமான கடைகளின் முதலாளிகளுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களை தொலைதூர கல்வி முறையில் பட்டபடிப்பு படிக்க வையுங்கள்.

அவர்களது எதிர்காலம் சிறப்பாக அமைய உறுதுணையாக இருங்கள். கல்விக்கு உதவுவது என்பது வேறு எந்த உதவியுடனும் ஒப்பிட முடியாத அளவிற்கு ஒப்பற்ற உதவியாகும். சென்னை,கோவை,திருப்பூர் மற்றும் தமிழ்நாடு முழுமையும் உள்ள அனைத்து தொழில் அதிபர்களும் இதனை செய்தால் தமிழகம் உயர்கல்வியில் நூறு சதவீதத்தினை நெருங்கும். ஏற்கனவே படிக்க வைக்கும் முதலாளிகளுக்கு மனமார்ந்த நன்றி. “திறமையான பிள்ளைகள் கல்வியைத் தொடராமல் நிற்பதனை பார்த்தால் இதயம் கலங்குகிறது”. என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments