Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸாரிடமிருந்து தப்பிக்க மோசடி மன்னன் தற்கொலை முயற்சி

Webdunia
திங்கள், 26 மார்ச் 2018 (15:38 IST)
மோசடி வழக்கில் தொடர்புடைய அயோக்கியன் ஒருவன் போலீஸார் முன்னிலையில் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் முத்தையா(50). இவர் மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தார். பின்னர் அங்கிருந்த மக்களை ஏமாற்றி இரண்டு கோடி ரூபாய் வரை மோசடி செய்து பெருந்துறைக்கு தப்பி வந்தார். முத்தையா பெருந்துறையில் இருப்பதை அறிந்த புனே போலீஸார், நேற்று முன்தினம் காலை பெருந்துறை வந்தனர். 
பெருந்துறை போலீசாரின் உதவியுடன், முத்தையா வீட்டிற்கு சென்ற போலீஸார் அவரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையின் போது முத்தையா கழிப்பறை செல்ல அனுமதி கேட்டார். போலீஸாரும் அவரை அனுமதிக்கவே, 'ஹார்பிக்' திரவத்தை குடித்து, தற்கொலைக்கு முயன்றார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, முத்தையா புனே போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments