Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜாமீன் கேட்டவருக்கு வித்தியாசமான நிபந்தனை விதித்த நீதிமன்றம்

Webdunia
வெள்ளி, 6 ஜூலை 2018 (20:49 IST)
ஒரு வழக்கில் ஜாமீன் கேட்கும் நபருக்கு நீதிமன்றம் நிபந்தனைகள் விதிப்பது வழக்கம். பொதுவாக காவல்நிலையத்தில் தினம் அல்லது வாரம் ஒருமுறை கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனை தான் நீதிமன்றத்தில் விதிக்கப்பட்டும். ஆனால் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று அளித்த ஒரு ஜாமீன் மனுமீதான தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்டவர் கைகட்டி காவல்துறை அதிகாரி முன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனை விதித்தது
 
வாகன சோதனையின் போது போலீஸாருடன்  தகராறில் ஈடுபட்டு முன் ஜாமீன் கோரிய வழக்கில், மனுதாரர் இராஜராஜன் என்பவர் சார்பு ஆய்வாளர் முன் கைகளை கட்டி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் உயர்நீதிமன்ற  மதுரை கிளை முன் ஜாமீன் வழங்கி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது 
 
இந்த உத்தரவு அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் உள்ளது. மனுதாரர் தனது தவறை புரிந்து வருந்த வேண்டும் என்ற நோக்கத்தில் அளிக்கப்பட்ட இந்த வித்தியாசமான நிபந்தனைக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி.. திமுக அரசை குற்றஞ்சாட்டும் அன்புமணி..!

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments