Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவையை பெண் ஓட்டுநர் ஷர்மிளா மீது வழக்குப்பதிவு! என்ன காரணம்?

Mahendran
புதன், 7 பிப்ரவரி 2024 (10:23 IST)
கோவையைச் சேர்ந்த பெண் ஓட்டுனர் ஷர்மிளா மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோவையைச் சேர்ந்த பெண் ஓட்டுனர் ஷர்மிளா ஓட்டிய பேருந்தில் கனிமொழி எம்பி பயணம் செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து அவருக்கும், அவர் ஓட்டி வந்த பேருந்து உரிமையாளருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் ஷர்மிளா வேலையிலிருந்து நீக்கப்பட்டார். 
 
இது குறித்த செய்திகள் ஊடகங்களில் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் அவருக்கு சொந்தமாக கார் வாங்கி கொடுத்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது பெண் ஓட்டுனர் ஷர்மிளா மீது சைபர் க்ரைம் போலீசார் மூன்று பிரிவுகளின் மேல் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
பெண் ஓட்டுனர் ஷர்மிளா சத்தி ரோடு சிக்னல் சந்திப்பில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் அதனை தட்டி கேட்ட எஸ்ஐ ராஜேஸ்வரி என்பவரை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் தவறாக பதிவு செய்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. 
 
இந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக-வுக்கு எதிரான ஆம் ஆத்மியின் போராட்டம் தொடரும்: டெல்லி முதல்வர் அதிஷி

ஈகோவால் இழந்த கூட்டணி .. தலைநகரை தவறவிட்ட ஆம் ஆத்மி..!

கெஜ்ரிவாலை தோற்கடித்தவர் தான் டெல்லி முதல்வரா? போட்டிக்கு 2 எம்.எல்.ஏக்கள்..!

ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்.. கருவில் இருந்த குழந்தை உயிரிழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments