Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீர்த்தேக்க தொட்டியில் விழுந்து 2 வயது குழந்தை பலி

Webdunia
புதன், 1 மார்ச் 2023 (16:37 IST)
திருப்பத்தூரில் நீர்த்தேக்க தொட்டியில்  விழுந்து 2 வயது பெண் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் அடுத்த பெரியகரம் பகுதியில் வசிப்பவர் சுந்தர் மற்றும்  ராதிகா. இவர்களுக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. திருமணம் ஆகி 10 ஆண்டுகள் கழித்து கெளசியா என்ற பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில், வீட்டில் கெளசிகா விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த நீர் தேக்க தொட்டியில் தவறி விழுந்துள்ளார் கெளசிகா. பின்னர், குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு, குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவர், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, குழந்தையை பிரேத பரிசோதனையை செய்ய கூடாது என்று உறவினர்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் திருப்பத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ், திருப்பத்தூர், நகர காவல் ஆய்வாளார் ஹேமாவதி உறவினர்களிடம் பேச்சு நடத்தினர். இருப்பினும் பிரேத பரிசோதனை செய்த குழந்தையின் உடலை ஒப்படைத்தனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments