Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை ரயில் தீவிபத்தில் இறந்தவர்களின் உடல்கள்.. லக்னோவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு..!

Webdunia
ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2023 (08:04 IST)
மதுரை ரயில் நிலையத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் பலியான ஒன்பது பேர்களின் உடல் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இங்கிருந்து விமானம் மூலம் லக்னோவுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.  ’
 
கேஸ் சிலிண்டர் காரணமாக ரயில் நிலையத்தில் ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒன்பது பேர் உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர்.  
 
இந்த நிலையில் உயிரிழந்த உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு மதுரையிலிருந்து சென்னை கொண்டுவரப்பட்டது. மூன்று ஆம்புலன்ஸ்களில் ஒன்பது உடல்கள் சென்னை வந்தடைந்த நிலையில் இன்று காலை 10.15 மணிக்கு லக்னோ விமானத்தில் 5 உடல்கள்  அனுப்பி வைக்கப்படுவதாகவும் 11.15 மணிக்கு மற்றொரு விமானத்தில் நான்கு உடல்கள் அனுப்பி வைக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
இது குறித்து ஏற்பாடுகளை ரயில்வே துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments