Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இராணுவ வீரர்களுக்கு கரூர் பரணி பார்க் கல்விக் குழும மாணவர்களின் 75,000 ராக்கி

Webdunia
வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (21:09 IST)
கரூர் பரணி பார்க் சாரணர் மாவட்டம் சார்பாக  எல்லையைப் பாதுகாக்கும் நமது இராணுவ  வீரர்களுக்கு ராக்கி அனுப்பும் விழா  கரூர் அட்லஸ் கலையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு கரூர்  மாவட்ட கலெக்டர் அன்பழகன்  தலைமை  தாங்கினார்.பரணி பார்க் கல்விக் குழும தாளாளர் மோகனரெங்கன், செயலர்  பத்மாவதி மோகனரெங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இதில்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் 'தமிழ் தூதர்' தருண் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இராணுவ வீரர்களுக்காக  பரணி பார்க் கல்விக் குழும  மாணவர்கள்  தயாரித்திருந்த 75,000  ராக்கிகளை பெற்றுக் கொண்டு  பேசுகையில், பரணி பார்க் சாரண, சாரணீய  மாணவர்கள் நாட்டுப் பற்றோடு இராணுவ  வீரர்களுக்கு ராக்கி அனுப்பி  அவர்களின் அன்பை வெளிப்படுத்துவதிலும்  நாட்டிற்கே  முன்  உதாரணமாக  திகழ்கின்றனர் என்று கூறினார்.

இவ்விழாவில் பேசிய பரணி பார்க்  கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர்  ராமசுப்பிரமணியன் பேசுகையில், “இராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் அவர்கள் மீது அன்பும், அக்கறையும் கொண்ட சகோதரிகள் உள்ளார்கள் என்பதை உணர்த்தும் வகையில் 75,000 ராக்கிகள் அனுப்பபடுகிறது.

முதல் வருடம் 15000 ராக்கிகள் டோக்லாமிற்கும், இரண்டாம் வருடம் 16000 ராக்கிகள் இராணுவ மருத்துவ முகாம்களில் இருந்த இராணுவ வீரர்களுக்கும் அனுப்பி வைக்கப்படது. இவ்வருடம்75,000 ராக்கிகள் இன்று வரை தயாரித்துள்ளனர் மேலும் இராணுவ  வீரர்களுக்கு  அனுப்புவதற்கு முன் 1,00,000  ராக்கிகள் தயாரித்து முடிக்கப்படும்”  என்றும்  கூறினார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments