Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதகையில் மண்சரிவில் 7 பேர் உயிரிழப்பு- 4 பேர் கைது

Sinoj
புதன், 7 பிப்ரவரி 2024 (21:17 IST)
உதகையில் உள்ள காந்தி நகரில் வீடு கட்டும் பணியின்போது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இன்று 7 தொழிலாளர்கள் உயிரிந்தனர். இந்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உதகையில் உள்ள காந்தி நகரில் வீடு கட்டும் பணி இன்று  நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது வீட்டின் பக்கவாட்டு பகுதியில் மண்ணை வெட்டி எடுத்த்போது, பழைய கழிவறை இடிந்து விழுந்து மண்சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவில் சிக்கி 6 பெண்கள் உட்பட  7 பேர்  உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விபத்தில் பலியான தொழிலாளர்களுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் கூறி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் கட்டட உரிமையாளர் பிரிட்ஜோ, ஒப்பந்ததாரர் பிரகாஷ், மேஸ்திரிகள், ஜாகிர் அகமது, ஆனந்த்ராஜ் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், அனுமதிக்கு மாறாகவும், பணியாளர்கள் பாதுகாப்பின்றி கட்டுமானப் பணிகள் மேற்கொண்ட இந்தக் கட்டடத்திற்கு உதகை நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. முடிவே இல்லையா? முதலீட்டாளர்கள் அதிருப்தி..!

அரசியலில் மூத்த தலைவர், இளைய தலைவர் என்றெல்லாம் எதுவும் கிடையாது: செங்கோட்டையன்

ரூ.5 லட்சம் வரதட்சணை கொடுத்த மணமகள் வீட்டார். ஒரே ஒரு ரூபாய் மட்டும் எடுத்து கொண்ட மணமகன்..!

திருப்பதியில் தங்க ஏடிஎம்.. வெங்கடாஜலபதி டாலரை எளிதில் வாங்கலாம்..!

யூடியூபில் பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ.. விசாரணைக்கு உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments