Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுதியில் உணவுசாப்பிட்ட 50 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்...பரபரப்பு சம்பவம்

Webdunia
வியாழன், 13 அக்டோபர் 2022 (20:15 IST)
நாகபட்டினம் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி செவிலியர் பயிற்சிப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் நேற்றிரவு பூரான் கலந்த சாம்பாரை சாப்பிட்டதால் 50 பேர் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகிறது.

நாகபட்டினம் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி செவிலியர் பயிற்சிப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில், தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 287 மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று, இரவு உணவாக மாணவிகளுக்கு தோசையுடன் சாம்பார் வழங்கப்பட்ட நிலையில் இதைச் சாப்பிட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து,மாணவிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில், 20 க்கும் மேற்பட்ட மாணவிகள் உள்   நோயாளிகள் பிரிவிலும், 30க்கும் மேற்பட்ட மாணவிகள் முதலுதவி சிகிச்சை பெற்றுள்ளனர்.  இந்த சம்பவத்தை அடுத்து, மாணவிகளுக்கு தரமான உணவு வழங்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

 
Edited by Sinoj
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments