Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதியம் 1 மணிக்குள் 45% வாக்குப்பதிவு.. மாலைக்குள் 60%ஐ தாண்டும் என எதிர்பார்ப்பு..

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2023 (13:57 IST)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மதியம் ஒரு மணிக்குள் சுமார் 45 சதவீத வாக்குப்பதிவு நடந்துள்ளதாகவும் மாலைக்குள் 60% வாக்குப்பதிவை தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,27,547 என்றும் ஆண் வாக்காளர்கள் 1,11,025 என்றும் பெண் வாக்காளர்கள் 1,16,497 என்றும் திருநங்கை வாக்காளர்கள் 25 என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மொத்த வாக்காளர்களில் சுமார் 45 சதவீதம் வாக்காளர்கள் அதாவது 1,01,392 பேர் மதியம் ஒரு மணிக்குள் வாக்களித்து விட்டதாகவும் இன்னும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருவதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் 60% தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
குறிப்பாக முதல் முறையாக ஓட்டு போடும் இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஓட்டு போட்டு வருகிறார்கள் 
 
இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் எதிர்பாராத முடிவு கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments