Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று 44 மின்சார ரயில்கள் ரத்து.. என்ன காரணம்?

Siva
ஞாயிறு, 11 பிப்ரவரி 2024 (08:05 IST)
தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இன்று 44 மின்சார ரயில்கள் ரத்து  செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 11-3:30 மணி வரை தண்டவாள பராமரிப்பு பணிகள், இன்ஜினியரிங் பணிகள் நடைபெறுகிறது. மேலும்  சென்னையில் கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக சென்னையில் இன்று 44 மின்சார ரயில்கள் ரத்து என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
 
சென்னை எழும்பூர்- விழுப்புரம் ரயில்வே வழித்தடத்தில் கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு மற்றும் என்ஜினீயரிங் பணி இன்று காலை 11 மணி முதல்  பிற்பகல் 3.30 மணி வரை நடைபெற உள்ளது. 
 
அதேபோல் சென்னை கடற்கரை- தாம்பரம், கடற்கரை- செங்கல்பட்டு, தாம்பரம்- கடற்கரை, செங்கல்பட்டு- கடற்கரை,காஞ்சிபுரம்- கடற்கரை, திருமால்பூர்- கடற்கரை இடையே இயக்கப்படும் 44 மின்சார ரயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளது.
 
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு காலை 10.30 காலை 10.40, காலை 10.50, காலை பதினொரு மணி, காலை 11.10, காலை 11.20, காலை 11:30, காலை 11.40, காலை 11.50, மதியம் 12 மணி, மதியம் 12.10, மதியம் 12.20, மதியம் 12.30, மதியம் 12.50 மதியம், ஒரு மணி மதியம் 1:15 மதியம், 1.30 மதியம், 1.45 மதியம் 2 மணி, 2:15, 2.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
மேலும் தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு காலை 10.05 காலை 10:15 காலை 10:25 காலை 10:45 காலை 10.55 காலை 11.25 காலை 11.35 மதியம் 12 மதியம் 12:15 மதியம் 12.45 மதியம் 1.30 1.45, மதியம் 2:15 மாலை 4.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு காலை 9.40 10.55 11.30 மதியம் 1 மணி ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரயில்களும், காலை 9:30 மணிக்கு காஞ்சிபுரம்-கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரயிலும், 11.05 மணிக்கு திருமால்பூர்-கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரயில் என மொத்தம் 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
ஆனால் அதே நேரத்தில் பயணிகள் வசதிக்காக தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மதியம் 11:55 மதியம் 12.45, மதியம் 3.25 மதியம் 3.45 மதியம் 2:20 2.25 ஆகிய நேரங்களிலும், மறுமார்க்கமாக செங்கல்பட்டு-தாம்பரம் இடையே காலை 9:30 காலை 9:40 காலை 10.59, காலை 11.05, 11.30 மதியம் 12 மதியம் 1 மணி ஆகிய நேரங்களில் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments