Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் நாளே கூட்டம் இல்லை. அதிர்ச்சியில் கட்டணத்தை குறைத்த மெட்ரோ நிர்வாகம்

Webdunia
ஞாயிறு, 14 மே 2017 (22:52 IST)
சென்னையில் இன்று முதன்முதலாக சுரங்க மெட்ரோ ரயில் தொடங்கப்பட்டது. திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையிலான இந்த சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் வழித்தடத்தில் கட்டணம் ரூ.40 என்று இருந்ததால் முதல் நாளே மெட்ரோ ரயில் பாதிக்கும் மேல் காலியாக பயணிகள் இல்லாமல் சென்றது.



 


திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரை பேருந்தில் சென்றால் வெறும் ரூ.10தான் ஆகும். ஆனால் மெட்ரோ ரயிலில் ரூ.40 என்ற கட்டணம் இருப்பதால் பயணிகள் ஒருமுறை மெட்ரோ ரயில் அனுபவத்திற்காக மட்டுமே செல்கின்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மெட்ரோ நிர்வாகம் தற்போது டிக்கெட் விலையில் 40 சதவீதம் சலுகை என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனாலும் சலுகை ஒரு வாரத்திற்கு மட்டுமே என்று கூறப்பட்டிருப்பதால் தொடர்ந்து மெட்ரோ ரயிலுக்கு ஆதரவு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

ஏற்கனவே கோயம்பேடு முதல் சின்னமலை வரை ஓடும் மெட்ரோ ரயிலில் சுமாரான கூட்டம் தான் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments