Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 வயது வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தந்தை கைது!

10 வயது வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தந்தை கைது!

Webdunia
ஞாயிறு, 14 மே 2017 (20:16 IST)
ஹரியானா மாநிலத்தில் ஒரு நபர் தனது 10 வயது வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியுள்ள சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து அந்த கொடூர தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.


 
 
ஹரியானாவில் ஒரு பெண் தனது மகளுடன் மருத்துவமனை ஒன்றுக்கு சென்றுள்ளார். 10 வயதுடைய அந்த சிறுமியின் வயிறு வீங்கி பெரிதாக இருந்துள்ளது. இதனையடுத்து அந்த சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். காரணம் 10 வயது சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார்.
 
கர்ப்பமாக இருப்பதால் தற்போது சிறுமியின் உடல்நிலை மோசமாக உள்ளது. அதனால் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
 
இதனையடுத்து 10 வயது சிறுமி எப்படி கர்ப்பமானார் என விசாரித்து போது தனது வளர்ப்பு தந்தையால் பலமுறை சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் அதன் காரணமாக கர்ப்பமானதாகவும் தெரியவந்துள்ளது.
 
தான் பாலியல் பலாத்காரம் செய்வதை யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவதாகவும் சிறுமியை மிரட்டியுள்ளார் காம வெறிபிடித்த அந்த வளர்ப்பு தந்தை. இதனை தற்போது தான் அந்த சிறுமியின் தாய் அறிந்துள்ளார். இதனையடுத்து இது குறித்து அவர் காவல்துறையில் அளித்த புகாரை அடுத்து பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்