Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்த மேலும் 4 பேருக்கு கொரொனா உறுதி!

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2022 (21:13 IST)
சீனாவில் இருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு கொரொனா வைரஸ் தொற்று உலக நாடுகளுக்குப் பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இந்த கொரொனாவில் உருமாறிய பிஎஃப் 7 வைரஸ் தற்போது   ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு பரவி வருகிறது.

இந்த  நிலையில், இந்தியாவுக்கு வரும் வெளி நாட்டுப் பயணிகளில் சிலரிடம் மட்டும் ரேண்டம் பரிசோதனை செய்ய அறிவுறுத்தி வருகிறது.

தமிழகத்தில் இதுவரை 6 பேருக்கு கொரொனா தொற்று இருப்பதாக தகவல் வெளியான நிலைய்ய்ல், இன்று   வெளி நாடுகளில் இருந்து தமிழகம் வந்த மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ALSO READ: உலகில் கொரொனா பாதிப்பு அதிகமுள்ள நாடு இதுதான்!
 
இதில், துபாயில் இருந்து 2 பேருக்கும், மலேசியா, சீனாவில் இருந்த வந்த தலா ஒருவருக்கு இத்தொற்று உறுதியாகியுள்ளது.

இதுவரை தமிழகத்தில் மொத்தம் 10 பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments