Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி 1 முதல் சென்னைக்கு கூடுதல் பேருந்துகள்: போக்குவரத்து துறை

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2022 (20:33 IST)
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு சென்ற பொதுமக்கள் மீண்டும் சென்னை திரும்பி வருவதற்கு வசதியாக சென்னைக்கு ஜனவரி 1-ஆம் தேதி முதல் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. 
 
ஆங்கில புத்தாண்டு மற்றும் அரையாண்டு தொடர் விடுமுறை முடிந்து பயணிகள் சொந்த ஊர்களிலிருந்து ஜனவரி 1-ஆம் தேதி முதல் சென்னை திரும்ப உள்ளனர். அவர்களின் வசதிக்காக தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 600 பேருந்துகள் ஜனவரி 1-ஆம் தேதி முதல் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது
 
இந்த பேருந்துகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments