Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஒரு பட்டாசு தொழிற்சாலையில் விபத்து: 3 பேர் பரிதாப பலி!

Webdunia
வியாழன், 25 பிப்ரவரி 2021 (18:19 IST)
மீண்டும் ஒரு பட்டாசு தொழிற்சாலையில் விபத்து: 3 பேர் பரிதாப பலி!
சமீபத்தில் கோவில்பட்டியில் நடந்த பட்டாசு தொழிற்சாலை விபத்தில் பலர் காயமடைந்தனர் மற்றும் பலியாகினர் என்ற செய்தி தமிழகத்தையே உலுக்கியது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்று முன்னர் வெளியான தகவலின்படி சிவகாசி காளையார்க்குறிச்சி என்ற பகுதியில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்டதாகவும் காயமடைந்தவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
மேலும் இந்த பட்டாசு ஆலை விபத்தில் பத்துக்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமாகிவிட்டது என்றும் கட்டிட இடிபாடுகளில் ஒரு சில தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சிவகாசியில் கடந்த இரண்டு வாரத்தில் நிகழ்ந்த மூன்றாவது விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments