Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதி மறுப்பு திருமணம்… ஊரைவிட்டு 29 தலித் குடும்பங்கள் ஒத்திவைப்பு!

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2020 (16:28 IST)
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்டதால் உருவான தகராறில் 29 தலித் குடும்பங்கள் ஊரைவிட்டே தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

கிருஷ்னகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சூளகிரி அருகே உள்ளது உலகம் கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிட இளைஞர் ஒருவரும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் ஊரைவிட்டு வெளியேறி காதல் திருமணம் செய்துகொண்டனர். இதனால் பெண் வீட்டார் தலித் பகுதிக்கு சென்று அங்கிருந்த மக்களை தாக்கியதாக ஒரு வழக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே போல பெண் வீட்டு தரப்பில் தங்கள் பெண்ணைக் கடத்திச் சென்று திருமணம் செய்துகொண்டதாக ஒரு வழக்கு உள்ளது. இவையெல்லாம் நடந்து ஓராண்டு ஆகிவிட்ட நிலையில் இப்போது இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு வழக்குகளையும் வாபஸ் வாங்குவது என முடிவெடுத்துள்ளனர் ஆனால் ஆதிதிராவிடர் தரப்பு அதற்கு மறுக்கவே அந்த ஊரில் வசிக்கும் 29 குடும்பங்களையும் ஊரைவிட்டு தள்ளி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

39 ஆண்டுகளுக்குப் பிறகு“கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்த 2 ஜாம்பவான்கள்!

கணவரை இழந்து ஆன்லைன் வாடகை இரு சக்கர வாகனம் ஓட்டும் பணி செய்துவரும் பெண்களுக்கு 15-லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம்

மேலும் ஒருவர் பலி.. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி 62 ஆக அதிகரிப்பு ..!

போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய கட்டுப்பாடா..? ஐஆர்சிடிசி விளக்கம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments