Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. 28 வயது பெண் போக்சோ சட்டத்தில் கைது..!

Mahendran
வியாழன், 13 ஜூன் 2024 (12:48 IST)
பத்து வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 28 வயது இளம்பெண் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
தேனி மாவட்டத்திலுள்ள போடி அருகே குழந்தைகள் காப்பகத்தில் பத்து வயது சிறுவனுக்கு திடீர் என உடல்நிலை பாதிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை செய்தபோது அந்த விடுதியின் காப்பக நிர்வாகி முனீஸ்வரி என்ற 28 வயது பெண் அந்த சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. 
 
இதனை அடுத்து இது குறித்து போடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் விஜயலட்சுமி இது குறித்து விசாரணை செய்தார். 
 
இந்த விசாரணையில் காப்பக நிர்வாகி முனீஸ்வரி, 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட முனீஸ்வரி, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்துக்களை வன்முறையாளர்களா? ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

கூடலூர் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழை.. பல்வேறு கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியதால் பரபரப்பு..

நடைமுறைக்கு வந்த புதிய குற்றவியல் சட்டம்..! இபிஎஸ் கண்டனம்.!

வட்டச் செயலாளராக இருக்ககூட தகுதியில்லாதவர் அண்ணாமலை..! செல்வப்பெருந்தகை விமர்சனம்..!!

மக்களவையை தெறிக்கவிட்ட ராகுல்.! அனல் பறக்கும் விவாதம்..! 2 முறை குறுக்கிட்ட பிரதமர் மோடி.!!

அடுத்த கட்டுரையில்