Webdunia - Bharat's app for daily news and videos

Install App

24 மணி நேர மது விற்பனைதான் திராவிட மாடலா? ஆர்.பி.உதயகுமார் கேள்வி

Webdunia
சனி, 7 ஜனவரி 2023 (14:39 IST)
இருபத்தி நான்கு மணி நேரமும் தொடர்ச்சியாக மது விற்பனை செய்வதுதான் திராவிட மாடலா என முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். 
 
24 மணி நேரமும் மருத்துவத்திற்கு சேவை இருக்க வேண்டும் என்றும் ஆனால் தற்போது தமிழகத்தில் 24 மணி நேரமும் மது விற்பனை நடந்து கொண்டிருக்கிறது என்றும் பள்ளிக்கூடங்கள் அருகிலேயே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை நடக்கிறது என்றும் பல தொகுதிகளில் இதுபோன்ற நிலை தான் உள்ளது என்றும் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
 
தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று ஐகோர்ட் பரிந்துரை செய்துள்ள நிலையில் டாஸ்மாக் விற்பனை நிலையங்களை பயன்படுத்தி திமுக அரசு ஊழல் செய்கிறதோ என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்து உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
மதுபானங்கள் அதிக விலைக்கு 24 மணி நேரமும் நேர கட்டுப்பாடு இல்லாமல் விற்கப்பட்டு வருகின்றன என்றும் இந்த பணம் திமுகவின் கஜானாவுக்கு செல்கிறது  என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுதான் திராவிட மாடலா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிருப்தியில் இருக்கிறாரா சரத்குமார்? மீண்டும் தொடங்கப்படுகிறது அ.இ.ச.ம.க?

எடப்பாடி பழனிசாமிக்கு Z பிரிவு தரும் மத்திய அரசு.. உண்மையில் பாதுகாப்பா? அல்லது உளவு பார்க்கவா?

2026 தேர்தலில் 10 சீட்டுக்கள் வேண்டும்.. இப்போதே துண்டு போடும் வைகோ..!

7000 mAh பவர் பேட்டரி.. வாடிக்கையான அம்சங்கள்..! - OPPO K13 5G எப்படி?

அடுத்த 5 நாள்களுக்கு வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம்: வெய்யில் கொளுத்தும்: வானிலை எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments