Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கழுத்தில் தாலியுடன் பள்ளிக்கு வந்த சிறுமி!

Webdunia
புதன், 7 பிப்ரவரி 2018 (17:55 IST)
14 வயது சிறுமி ஒருவர் கடந்த ஒரு வருடமாக கழுத்தில் கட்டப்பட்ட தாலியை மறைத்து பள்ளிக்கு வந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
 
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமிக்கு ஒரு வருடத்துக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. அவர் தனது கணவர் கட்டிய தாலியை கடந்த ஒரு வருடமாக மறைத்து அணிந்த நிலையிலேயே பள்ளிக்கூடத்துக்கு வந்துள்ளார்.
 
இந்நிலையில் சிறுமியின் கழுத்தில் தாலி இருப்பதை யாரோ ஒருவர் பார்த்து மகளிர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து உடனடியாக விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட சமூக நல அலுவலர் மற்றும் அதிகாரிகள் இதுகுறித்த விசாராணையில் இறங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments