Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 15 இடங்களில் சதம் அடித்த வெயில்.! எங்கெல்லாம் தெரியுமா.?

Senthil Velan
செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (20:40 IST)
தமிழ்நாட்டில் 15 இடங்களில் இன்று 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல் வெயில் சுட்டெரித்தது. அதிகபட்சமாக சேலத்தில் 108.14°F  வெயில் கொளுத்தியதால் மக்கள் அவதியடைந்தனர்.
 
தமிழகத்தில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்நிலையில் தமிழ்நாட்டில் 15 இடங்களில் இன்றும் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல் வெயில் சுட்டெரித்தது. அதிகபட்சமாக சேலத்தில் 108.14°F வெப்பமானது பதிவாகி உள்ளது. 

ALSO READ: பெண்களுக்கு மட்டுமே வேலை..! சட்டத்துக்கு எதிரானது..! உயர்நீதிமன்றம் கருத்து..!!
 
அதேபோல் சென்னை மீனம்பாக்கம் 100.94°F, கோயம்பத்தூர் 102.56°F, தர்மபுரி 105.8°F, ஈரோடு 107.6°F, கரூர் பரமத்தி 106.7°F, மதுரை நகரம் 105.8°F, மதுரை விமான நிலையம் 103.82°F, நாமக்கல் 104.9°F, தஞ்சாவூர் 102.2°F, திருப்பத்தூர் 106.88°F, திருச்சிராப்பள்ளி 104.18°F, திருத்தணி 103.64°F, வேலூர் 106.7°F, பாளையங்கோட்டை 102.2°F வெப்பமானது பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சியில் சாராய வேட்டைக்கு சென்ற 7 போலீசார் மாயம்.. வழிமாறி சென்றார்களா?

திருச்செந்தூர் கடற்கரையில் தவறவிட்ட 5 சவரன் தங்க சங்கிலி.. களத்தில் இறங்கிய 50 பேர்.. என்ன நடந்தது?

விபத்து நடந்தால் வாகனங்களை நிறுத்திவிட முடியுமா? மதுவிலக்கு குறித்து கமல்ஹாசன் கருத்து..!

பாஜக ஆட்சியில் கல்வித்துறை ஊழல்வாதிகளிடம் ஒப்படைப்பு..! பிரியங்கா காந்தி காட்டம்..!

நீட் தேர்வு முறைகேடு..! வழக்குப்பதிவு செய்தது சிபிஐ..!!

அடுத்த கட்டுரையில்
Show comments