Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 மணி வரை வெளுக்கும் மழை எங்கெங்கு தெரியுமா??

Webdunia
செவ்வாய், 1 நவம்பர் 2022 (08:31 IST)
தமிழகத்தின் 15 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை தொடரும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு.


சமீபத்தில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளதால் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை தொடரும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 15 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

Edited By: Sugapriya Prakash

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments