கனமழை எதிரொலி: தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை!

Webdunia
செவ்வாய், 1 நவம்பர் 2022 (08:11 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நேற்று இரவு முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது
 
இந்த நிலையில் கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர் 
 
கனமழை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் அதேபோல் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் தஞ்சை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து கொண்டிருப்பதால் மேலும் சில மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

சென்னையின் முக்கிய திட்டத்திற்கு ரூ.200 கோடி கொடுத்த ஸ்ரீ சத்ய சாயி பாபா அறக்கட்டளை..!

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

28 புதிய ரயில்களை வாங்க சென்னை மெட்ரோ நிர்வாகம் டெண்டர்..! எத்தனை கோடி மதிப்பு?

நள்ளிரவில் வீடு வீடாக சென்று உதவி செய்யுங்கள் என்ற கூச்சலிட்ட பெண்.. பொதுமக்கள் அச்சம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments