10ம் வகுப்பு ரிசல்ட்டை பார்க்கும் முன்பே மாணவன் உயிரிழப்பு.. லாரி மோதி விபத்து..!

Mahendran
வெள்ளி, 10 மே 2024 (11:04 IST)
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர் ரிசல்ட் பார்க்கும் முன்பே விபத்தில் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு படித்த மாணவர் ஜீவா என்பவர் இன்று மிகுந்த ஆர்வத்துடன் தேர்வு முடிவை காண காத்திருந்த நிலையில் அவர் மதுரவாயல் பாலத்தின் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
 
அப்போது எதிரே வந்த லாரி திடீரென மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரியை ஓட்டி வந்த டிரைவர் சாலையிலேயே வண்டியை நிறுத்திவிட்டு தலைமறைவாகியுள்ளதாகவும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
இன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகி உள்ள நிலையில் தேர்வு முடிவை பார்க்கும் முன்பே மாணவர் ஜீவா பலியான சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
இந்த நிலையில் அவருடன் படித்த மாணவர்கள் ஜீவாவின் உடலுக்கு மாலை மரியாதை செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளன. மதுரவாயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள மாணவர்கள் அனைவரும் ஜீவாவின் மரணம் காரணமாக பெரும் சோகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments