Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டு போட்டால் திரையரங்குகளில் கட்டண சலுகை.. ஹரியானா அரசு அறிவிப்பு..!

Mahendran
வெள்ளி, 10 மே 2024 (10:42 IST)
இந்தியாவில் ஏழு கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 3 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்து உள்ளது என்பதும் மே 13, 20 , 25 மற்றும் ஜூன் 1 ஆகிய நான்கு கட்ட தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் தெரிந்தது 
 
இந்த நிலையில் ஹரியானாவில் மே 25ஆம் தேதி 10 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
 
இதன்படி மக்களவைத் தேர்தலில் ஓட்டு போட்டு விரலில் உள்ள மையை காண்பித்தால் திரையரங்குகளில் கட்டண சலுகை பெற்றுக் கொள்ளலாம் என்றும் திரையரங்கு வளாகத்தில் உள்ள ஹோட்டல்களிலும் ஓட்டு போட்டவர்களுக்கு கட்டண சலுகை கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 இது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் திரையரங்கு உரிமையாளர்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஓட்டு போட்ட வாக்காளர்களுக்கு தரும் கட்டண சலுகையை அரசே தந்துவிடும் என்று திரையரங்கு உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments