Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''1000-ஆவது கோயில் குடமுழுக்கு விழா'' -அமைச்சர் மற்றும் அதிகாரிகளை பாராட்டிய முதல்வர்

Webdunia
ஞாயிறு, 10 செப்டம்பர் 2023 (10:09 IST)
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில், தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று 856 நாட்கள் ஆகிறது.

இந்த நிலையில், தமிழகத்தின் வரலாற்று சிறப்புமிக்க திருக்கோவில்களை அதன் பழமை மாறாமல் மீட்டெடுத்து சாதனை படைத்த இந்து அறநிலையத்துறை 1000வது திருக்குடமுழுக்கு விழா சென்னை- மேற்கு பாமபலத்தில்  உள்ள   அருள்மிகு விசுவநாதர் திருக்கோவிலில் நடத்துகிறது.

இதுகுறித்து, முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் சமூக வலைதள பக்கத்தில்,

"எல்லார்க்கும் எல்லாம்" என்ற திராவிட மாடல் ஆட்சியில் அனைத்துத் துறைகளும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது.

குறிப்பாக  தமிழக இந்து அறநிலையத்துறை-இன் செயல்பாடுகள் அனைத்திலும் சிறப்பாக இருக்கின்றன.

5000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்களை இரண்டு ஆண்டு காலத்தில் மீட்டது திமுக அரசு.

இன்றைய நாள், 1000-ஆவது கோயில் குடமுழுக்கு விழாவை மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோயிலில் நிகழ்த்தியிருக்கிறது இந்து சமய அறநிலையத்துறை.

இறைநம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் இணையற்ற ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது.

இதற்குக் காரணமான அமைச்சர்  சேகர் பாபு அவர்களையும் - அதிகாரிகளையும் - அலுவலர்களையும் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்!'' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments