பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
அதன்படி இந்த மாத பவுர்ணமி நாளான, நாளை (புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு தொடங்கி, மறுநாள் (வியாழக்கிழமை) காலை 6.53 மணிக்கு முடிவடைகிறது. இதுவே கிரிவலம் செல்ல உகந்த நேரமாகும்.
இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் வரலாம். இத்தகவலை அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.