Publish Date: Fri, 14 Apr 2017 (06:31 IST)
Updated Date: Fri, 14 Apr 2017 (07:04 IST)
திரைப்படங்களில் நாம் பல முதலிரவு காட்சிகளை பார்த்திருப்போம். புதுப்பெண் பால் செம்புடன் வருவார். மணமகன் அருகில் உட்காருவார், பின்னர் லைட் அணைக்கப்படும். ஆனால் நிஜ வாழ்க்கையில் இதெல்லாம் நடப்பது உண்மையா?
ஒரு தனியார் நிறுவனம் முதலிரவில் புதுத்தம்பதிகள் செக்ஸ் வைத்து கொள்கிறார்களா? என்பது குறித்து ஒரு சர்வே எடுத்துள்ளது. இந்த சர்வே மூலம் தெரிய வந்துள்ள வித்தியாசமான தகவல் என்னவெனில் 52% தம்பதிகள் முதலிரவில் செக்ஸ் வைத்து கொள்வது இல்லை என்பதுதான்.
திருமணத்தன்று வேலைப்பளுவால் ஏற்பட்ட சோர்வு, பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணம் என்றால் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கு எடுத்து கொள்ளப்படும் நேரம், திருமணம் அல்லது ரிசப்சனில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டிருந்தால் அதனால் ஏற்பட்ட மன அழுத்தம், ஆகியவை முதலிரவு அன்று செக்ஸ் வைத்து கொள்ளாததற்கு காரணமாக இந்த சர்வேயில் தெரியவந்துள்ளது. மேலும் திருமணத்திற்கு முந்தைய நாள் மணமகன் தனது நண்பர்களுடன் குடித்துவிட்டு போதை தெளியாமல் இருப்பதும் ஒரு காரணமாக தெரியவருகிறது
ஒருசில ஆண்கள் கட்டாயப்படுத்தி மனைவியிடம் செக்ஸ் உறவு கொள்வதாகவும், ஒருசிலர் மூன்றாவது அல்லது நான்காவது நாளில் செக்ஸ் வைத்து கொள்வதாகவும் இந்த சர்வே மூலம் தெரிந்தவை ஆகும்.