Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராஜீவ் வழக்கில் 7 பேர் விடுதலை - அற்புதம்மாள் நெகிழ்ச்சி பெருக்கு!

ராஜீவ் வழக்கில் 7 பேர் விடுதலை - அற்புதம்மாள் நெகிழ்ச்சி பெருக்கு!
, புதன், 19 பிப்ரவரி 2014 (14:04 IST)
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்வதாக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது குறித்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறியதாவது:-
FILE

எனது ஏக்கத்தையும், எதிர்பார்ப்பையும் இத்தனை சீக்கிரமாக முதலமைச்சர் ஜெயலலிதா புரிந்து கொண்டிருப்பது மட்டற்ற மகிழ்ச்சி தருகிறது. பேரறிவாளன், சாந்தன், முருகன் மட்டுமின்றி, ஆயுள் தண்டனை கைதியாக இருந்த நளினி உள்ளிட்ட 4 பேரையுமே விடுதலை செய்து அவர் அறிவித்திருப்பது கூடுதல் மகிழ்ச்சியாக உள்ளது.

இந்த நேரத்தில் முதலமைச்சருக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. அவருக்கு எத்தனை முறை நன்றிகள் கூறினாலும் போதாது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் மகனின் விடுதலைக்காக குரல் கொடுத்த அத்தனை பேருக்கும் நன்றி. குறிப்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவத்துக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். எனது வாழ் நாளிலேயே மகிழ்ச்சியான தருணமாக இதனை பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil