என் தந்தை என்று கூறிக்கொள்கிறவர்தான் வதந்திகளுக்குக் காரணம்- கனகா
, புதன், 31 ஜூலை 2013 (10:59 IST)
கனகா புற்றுநோயால் மரணமடைந்ததாக தமிழகத்தின் டாப் செய்தித் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட அதனைப் பின்பற்றி மற்ற பத்திரிகைகளும் அதனை எதிரொலிக்க திடீரென கனகா தோன்றி எதையும் நம்பாதீர்கள் எனக்கு ஒன்றுமில்லை என்று கூறினாரே பார்க்கலாம்! இதனையடுத்து செய்தியாளர்கள் அவர் வீட்டுக்கு சென்ற போது அவர் உயிருடன் இருந்தது தெரியவந்தது.அவர் அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது:நான் ஆலப்புழாவில் சிகிச்சை பெற்றுவந்தேன் என்று செய்திகள் வெளியானது தவறான தகவல். நான் என் சென்னை வீட்டில்தான் இருந்தேன். எனக்கு புற்று நோய் என்று வதந்தி கிளப்பப்பட்டது. நல்ல வேளை எனக்கு எய்ட்ஸ் நோய் என்று செய்தி வரவைல்லை.இந்த வதந்திகளை என் தந்தை என்று கூறிக்கொள்ளும் தேவதாஸ் என்பவர்தான் பரப்புகிகிறார். இதனைக் காரணமாக வைத்து என்னுடன் பேசி என் சொத்துக்களை அபகரிக்கப்பார்க்கிறார்.பத்திரிக்கை செய்தி வந்ததும்....
ஆலப்புழாவுக்கு செல்லாமல் சென்னை வீட்டிற்கு அவர் என்னை வந்து பார்க்க முயன்றபோதே அவரே இத்தகைய வதந்திகளைப் பரப்புகிறார் என்று சந்தேகப்படுகிறேன்.என் அம்மாவுக்கு நல்ல கணவனாக எனக்க்கு நல்ல தந்தையாக அவர் எந்நாளும் நடந்து கோண்டதில்லை. இவருக்கு என்னை விட என் சொத்து மீதுதான் கண்.இதனால்தான் ஆண்களை பிடிக்காமல் போனது. தனிமையில் வாழ்ந்து வந்தேன். எக்காரணம் கொண்டும் என் தந்தை என்று கூறிக்கொள்ளும் தேவதாசை வீட்டினுள் அனுமதிக்க மாட்டேன். என் அம்மாவிற்கு அவர் செய்த துரோகத்தை மன்னிக்கமாட்டேன்.சில நடிகர், நடிகைகளிடம் பேச முயற்சி செய்தேன். அவர்கள் பேச விரும்பவில்லை. பரவாயில்லை.இவ்வாறு கனகா கூறினார்.