சென்னையில் மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டதால் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டி ஓடினர்.
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் இந்திய நேரப்படி பிற்பகல் 2.15 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
குறிப்பாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நிலநடுக்கம் ஏற்பட்டது. சென்னையில் மாலை 5 மணிக்கு சுனாமி ஏற்றலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து மெரினா கடற்கரையில் இருந்த பொதுமக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். நிலநடுக்கத்துக்கு பிறகு ஊழியர்கள் மீண்டும் அலுவலகத்திற்கு சென்று பணி செய்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையல் சுமார் மாலை 4.17 மணிக்கு மீண்டும் சென்னையில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 8.2 ஆக பதிவானது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர்.
தொடர் நிலநடுக்கம் காரணமாக பல அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் அவசரம் அவசரமாக ஊழியர்கள் வீடுகளுக்கு திரும்பினர்.