முல்லைப் பெரியாறு அணையின் உறுதித் தன்மை குறித்து தொழில்நுட்ப குழுவினர் 2வது நாளாக ஆய்வு மேற்கொண்டனர்.
மத்திய மண் ஆராய்ச்சி மைய இணை இயக்குனர் ராஜ்பால் சிங் தலைமையில் தொழில்நுட்ப வல்லுநர்கள், பொறியாளர்கள், நீரிமூழ்கி வீரர்கள் என்று மொத்தம் 13 பேர் கொண்ட குழுவினர் ஆய்வில் ஈடுபடுகின்றனர்.
ஆக்ஸிசன் சிலிண்டர்களுடன் அணைக்குள் குதித்துள்ள நீர்மூழ்கி வீரர்கள் அதிநவீன தானியங்கி கேமிரா மூலம் ஆழப்பகுதிகளை புகைப்படம் எடுத்தனர்.
அணையின் மொத்த நீளமான 1,200 அடியை தலா 100 அடியாக பிரித்து 12 இடங்களில் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். 300 அடி, 600 அடி, 900 அடி ஆகிய இடங்களில் அணையின் உறுதித் தன்மையை வல்லுர்கள் சோதித்தனர்.
தமிழக உயரதிகாரிகளும், கேரள நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளும் ஆய்வியை பார்வையிட்டனர். ஆய்வுப்பணிகள் முடிவடைந்த பின்னர் தொழில்நுட்ப குழு நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான குழுவிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.