Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாத்தூர் அருகே காவல‌ர் வெட்டிக்கொலை

Advertiesment
சாத்தூர் அருகே காவல‌ர் வெட்டிக்கொலை
செ‌ன்னை , புதன், 28 ஏப்ரல் 2010 (08:54 IST)
விருதுநகர் மாவட்டம் சா‌த்தூ‌ர் அருகே ரோ‌ந்து ப‌ணி‌யி‌ல் ஈடுப‌ட்டு கொ‌ண்டிரு‌ந்த காவலரை வா‌லிப‌ர் ஒருவ‌ர் சரமா‌ரியாக வெ‌ட்டி‌க் படுகொலை செ‌ய்தா‌ர்.

சாத்தூர் தாலுகா காவ‌ல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வ‌ந்த நாகரத்தினம் (40), அதே சரகத்துக்கு உட்பட்ட ஓ.மேட்டுப்பட்டி கிராமத்தில் தலைமை‌க் காவல‌ர் தம்பித்துரையுட‌ன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அதே ஊரை சேர்ந்த குமார் என்ற வாலிபர் நாகரத்தினத்தை சரமாரியாக வெட்டியதில் அவர் அந்த இடத்திலேயே உ‌யி‌ரிழ‌ந்தா‌ர்.

இதை தடுக்க முயன்ற தலைமை‌க் காவல‌ர் தம்பிதுரையை தாக்கி விட்டு குமார் தப்பி ‌வி‌ட்டான். தப்பி ஓடிய குமார் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. அவனை காவ‌ல்துறை‌யின‌ர் வலை ‌வீ‌சி தேடி வருகி‌ன்றன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil