Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போரை நிறுத்த மறுத்தால் இலங்கையுடன் உறவு துண்டிப்பு : ‌பிரதமரு‌க்கு கருணாநிதி தந்தி

Advertiesment
இலங்கை கருணாநிதி மன்மோகன் சிங் சோனியாகாந்தி
செ‌ன்னை , ஞாயிறு, 19 ஏப்ரல் 2009 (10:59 IST)
போர் நிறுத்த கோரிக்கையை இலங்கை அரசு ஏற்க மறுத்தால், அந்த நாட்டுடன் உறவை துண்டித்துக் கொள்ளவேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாகாந்தி ஆகியோருக்கு முதலமைச்சர் கருணாநிதி அவசர தந்தி அனுப்பி உள்ளார்.

இது தொட‌ர்பாக நேற்‌றிரவு கருணாநிதி அனு‌ப்‌பியு‌ள்ள அவசர த‌ந்‌தி‌யி‌ல், இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அயலுறவு‌த்துறை அமை‌ச்ச‌ர் விடுத்துள்ள வேண்டுகோளை நன்றியுடன் வரவேற்கிறோம். இந்த போர் நிறுத்த வேண்டுகோளை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளாமல், நடைமுறைப்படுத்தாமல் இருந்தால் இலங்கையுடன் அனைத்து தூதரக உறவுகளையும் இந்தியா துண்டித்துக்கொள்ள வேண்டும் எ‌ன்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil