மகாத்மா காந்தியின் 61வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள படத்துக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரிஅனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் காந்தியின் திருவுருப் படத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.