சென்னை : ஈழத் தமிழர் படுகொலைக்கு துணைபோகும் இந்திய அரசினை கண்டித்து, ம.தி.மு.க. சார்பில் டெல்லியில் பாராளுமன்றம் அருகில் பிப்ரவரி 13ஆம் தேதி ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
டெல்லியில் பிப்ரவரி 12ஆம் தேதி வைகோ உண்ணாவிரதம் இருப்பார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.