9 குழந்தைகள் உள்பட 26 அகதிகள் இன்று தமிழகம் வந்தனர்.
வன்னிப் பகுதியை சேர்ந்த 8 குடும்பத்தினர் படகு மூலம் தனுஷ்கோடி அருகே உள்ள அரிச்சல்முனைக்கு வந்தனர். அவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
பின்னர் அவர்கள் அனைவரும் மண்டபம் அகதிகள் முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இலங்கையில் ராணுவத்தினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே போர் உச்ச கட்டத்தை அடைந்து வரும் நிலையில் தமிழகத்திற்கு அகதிகள் வருகை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.