Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஈரோட்டில் கோடிக்கணக்கான ஜவுளி தேக்கம்

ஈரோடு

Advertiesment
ஈரோட்டில் கோடிக்கணக்கான ஜவுளி தேக்கம்
ஈரோடு , புதன், 7 ஜனவரி 2009 (12:44 IST)
லாரிகள் வேலை நிறுத்தத்தின் காரணமாக ஈரோட்டில் கோடிக்கணக்கான ஜவுளிகள் தேக்கமடைந்துள்ளது.

ஜவுளி உற்பத்தியில் ஈரோடு மாவட்டம் முதன்மையாக திகழ்கிறது. ஈரோடு அருகே உள்ள சென்னிமலையில் உற்பத்தியாகும் ஜம்மக்காளம் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கு செல்வது மட்டுமின்றி அய‌ல்நாடுகளுக்கும் செல்கிறது.

நாள் ஒன்றுக்கு ஈரோட்டில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஒரு கோடி மதிப்புக்கு மேல் உள்ள ஜவுளிகள் லாரிகள் மூலம் அனுப்பப்படும்.
தற்போது லாரிகள் வேலைநிறுத்தத்தின் காரணமாக இந்த ஜவுளிகள் முற்றிலும் தேக்கமடைந்துள்ளது.

இதேபோல் சத்தியமங்கலம் பகுதியில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு செல்லும் வாழைதார் மற்றும் மல்லிகை பூ ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் காய், கறிகள் முற்றிலும் தடைபட்டதால் இப்பகுதியில் காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil