புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொய்யாமணிப்பட்டியில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளை முட்டி 29 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
அனைவருக்கும் அருகில் உள்ள மேலசிவபுரி சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.