Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொ‌ங்க‌‌ல் ப‌ண்டிகையையொ‌ட்டி 80 ‌விரைவு பேரு‌ந்துக‌‌ள் இய‌க்க‌ம்

பொ‌ங்க‌‌ல் ப‌ண்டிகையையொ‌ட்டி 80 ‌விரைவு பேரு‌ந்துக‌‌ள் இய‌க்க‌ம்
, வெள்ளி, 26 டிசம்பர் 2008 (17:38 IST)
பொ‌ங்க‌ல் ப‌ண்டிகையை மு‌ன்‌‌னி‌ட்டு ‌திரு‌ச்‌சி, மதுரை, நெ‌ல்லை உ‌ள்‌ளி‌ட்ட இட‌ங்க‌ளு‌க்கு 80 ‌விரைவு‌ப் பேரு‌ந்துக‌ள் இய‌க்க‌ப்பட உ‌ள்ளன.

இது தொட‌ர்பாக அரசு ‌விரைவு‌ப் போ‌க்குவர‌த்து‌க் கழக மேலா‌ண் இய‌க்குன‌ர் வெ‌ளி‌‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், "பொ‌ங்க‌ல் ப‌ண்டிகையை மு‌ன்‌னி‌ட்டு அரசு ‌விரைவு‌ப் போ‌க்குவர‌த்து‌க் கழக‌ம் 9.01.09 முத‌ல் 13.01.09 வரை ‌திரு‌ச்‌சி, மதுரை, கு‌ம்பகோண‌ம், த‌ஞ்சாவூ‌ர், நாக‌ப்ப‌ட்டின‌ம், ‌திருநெ‌ல்வே‌லி ம‌ற்று‌ம் பெ‌ங்களூரு ஆ‌கிய ஊ‌ர்களு‌க்கு செ‌ன்னை‌யி‌லிரு‌ந்து 80 ‌சிற‌ப்பு பேரு‌ந்துகளை இ‌ய‌க்க உ‌ள்ளது.

அதேபோ‌ல், ம‌ே‌ற்க‌ண்ட ஊ‌ர்க‌ளி‌லிரு‌‌ந்து செ‌ன்னை‌க்கு ‌திரு‌ம்புவத‌ற்கு‌ம் 18.01.2009 அ‌ன்று 80 ‌சிற‌ப்பு பேரு‌ந்துக‌ள் இய‌க்க‌ப்படு‌ம்" எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil