திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் தனித்துப்போட்டியிடும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளரை கட்சித்தலைவர் சரத்குமார் நாளை அறிவிக்கப்படுகிறார் என்று அக்கட்சியின் மாநில பொதுச்செயலர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருமங்கலம் சட்டமன்ற இடைத்தேர்தலில் எங்கள் கட்சி சார்பில் போட்டியிட 12 பேர் கடிதம் கொடுத்துள்ளனர். வேட்பாளர் யார் என்பது பற்றி நாளை (21ஆம் தேதி) நெல்லையில் நடைபெறும் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் சரத்குமார், வேட்பாளரை அறிமுகம் செய்து அறிவிப்பார் என்றார்.
வருகிற 26ஆம் தேதி முதல் தலைவர் சரத்குமார், ராதிகா சரத்குமாரும் தொகுதி முழுவதும் வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்வார்கள் என்று தெரிவித்த நாகராஜன், தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க. கட்சிகளைவிட எங்கள் கட்சி அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறும் என்றார்.
நடிகர், நடிகைகளை பிரச்சாரத்திற்கு அழைப்பது குறித்து சரத்குமார் தான் முடிவு செய்வார் என்று தெரிவித்த நாகராஜன், கட்சியின் வேட்பாளர் ஆண் வேட்பாளராகத்தான் இருப்பார் என்றார்.