Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓட்டப்பிடாரம் அருகே வே‌ன்- லா‌ரி மோத‌ல்: 3 பேர் பலி

Advertiesment
ஓட்டப்பிடாரம் அருகே வே‌ன்- லா‌ரி மோத‌ல்: 3 பேர் பலி
, வியாழன், 4 டிசம்பர் 2008 (11:35 IST)
தூ‌‌த்து‌க்குடி மாவ‌ட்ட‌ம் ஓ‌ட்ட‌ப்‌பிடார‌ம் அருகே வேனு‌ம், லா‌ரியு‌ம் நேரு‌க்கு நே‌ர் மோ‌தி‌க் கொ‌ண்ட ‌விப‌த்‌தி‌ல் 3 பே‌ர் ‌நிக‌ழ்‌விட‌த்‌திலேயே ப‌லியானா‌ர்க‌ள்.

ஓட்டப்பிடாரம் அடுத்த அக்கநாயக்கன்பட்டியை சேர்ந்த கணேசன், தனது ந‌ண்ப‌ர்க‌ள் இளையராஜா (27), ராமச்சந்திரன் (28) ஆ‌கியோருட‌ன் அருப்புக்கோட்டைக்கு சென்று விட்டு ஆ‌ம்‌னி வேனில் சொ‌ந்த ஊரு‌க்கு ‌திரு‌ம்‌பி‌க் கொ‌ண்டிரு‌ந்தன‌ர்.

வேனை கணேசன் எ‌ன்பவ‌ர் ஓட்டி வந்தார். இன்று அதிகாலை ஓட்டப்பிடாரம் அடுத்த முருகப்பட்டி விலக்கு அருகே ஆ‌ம்‌னி வேன் வந்த போது எதிரே வந்த லாரி ‌‌மீது நேரு‌க்கு நே‌ர் மோதியது. இதில் வேன் அப்பளம் போல் நொறுங்கியது.

ே‌னி‌ல் இரு‌ந்த கணேசன், இளையராஜா, ராமச்சந்திரன் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் ‌நி‌க‌ழ்‌விட‌த்‌திலேயே பலியானார்கள்.

இ‌ந்த‌ ‌விப‌த்து கு‌றி‌த்து காவ‌ல்துறை‌யின‌ர் வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்து‌ ‌விசா‌ரி‌த்து வரு‌கி‌ன்றன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil