Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோவையில் அ.இ.அ.தி.மு.க. நாளை ஆர்ப்பாட்டம் : ஜெயலலிதா அறிவிப்பு!

Advertiesment
கோவையில் அ.இ.அ.தி.மு.க. நாளை ஆர்ப்பாட்டம் : ஜெயலலிதா அறிவிப்பு!
, சனி, 29 நவம்பர் 2008 (22:39 IST)
மி‌ன்வெ‌ட்டை‌க் க‌ண்டி‌த்து‌‌ம், கோவை மாவட்ட மக்களின் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அ.இ.அ.தி.மு.க. சா‌ர்‌பி‌ல் நாளை க‌ண்டன ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நடைபெறு‌ம் எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌‌யி‌ன் பொது‌ச் செயல‌ர் ஜெயலலிதா அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆழியாறு கூட்டுக் குடி நீர்த் திட்டத்தையும், அத்திக்கடவு கூட்டுக் கூடிநீர் 2-வது திட்டத்தினையும் விரைந்து முடிக்காத, பவானி மற்றும் சிறுவாணி ஆறுகளின் குறுக்கே சிற்றணைகள் கட்ட நடவடிக்கை எடுத்திருக்கும் கேரள அரசின் அத்துமீறலை கண்டிக்காத, மின்வெட்டை நடைமுறைப்படுத்தியுள்ள தி.மு.க. அரசைக் கண்டித்தும;

கோவை மாவட்ட மக்களின் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோவை மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவையி‌ன் சார்பில் நாளை ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் கோவை மாநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு ஓட்டல் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" எ‌ன்று கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil