Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வலுவிழந்தது புயல்: மழை குறையும்!

Advertiesment
வலுவிழந்தது புயல்: மழை குறையும்!
சென்னைவாழ் மக்களின் கடந்த சில நாள் ஏக்கம் இன்று நனவாகப் போகிறது. ஆம். 4 நாட்களாக கொட்டித் தீர்த்த மழை வெள்ளிக்கிழமையான இன்று ஓரளவுக்குக் குறைந்துள்ளது.

சூரியன் தலைகாட்டத் தொடங்கியதும், வீட்டிற்குள்ளேயே முடங்கிய தங்கள் வாழ்க்கைக்கு விடிவு கிடைக்கும் என கருதி மக்கள் வெளியே வரத் தொடங்கினார்.

`நிஷா' என்ற பெயரை சென்னை உட்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள். அந்த அளவுக்கு சேதத்தையும், பாதிப்பையும், உயிரிழப்பையும் ஏற்படுத்திச் சென்றுள்ளது இந்த நிஷா புயல்.

அப்பேற்பட்ட புயல் இன்று வலுவிழந்து விட்டதாகவும், இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் மழை குறையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மையத்தின் இந்த அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil